புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக