ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மலை

மலைப்பான விஷயங்கள் வாழ்வில் பலமுறை நடக்கும்.
மலைகளைக் காணும்போதெல்லாம் மலைத்திருக்கிறேன் பலமுறை. அதன் அழகு, கம்பீரம் அமைதி என்னை மலைக்க வைத்திருக்கின்றன.இன்னமும்.
உண்மையில் மலைகள் மனிதனின் இயற்கையான வாழ்வுக்கு பெருமளவு துணை புரிகின்றன. காற்றையும் மேகங்களையும் தடுத்து மழை பொழிவிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன!

 இந்த மலைகளைத்தான் இன்று உடைத்து கிரானைட் கற்களாக்கி பண மலைகளை உருவாக்குகிறார்கள் பண முதலைகள்.
இதற்கு அரசு அதிகாரிகளும் துணை போவதாகக் கேள்வி!

என்று மனிதன் பிழைப்புக்காக கிராம வாழ்வைத் தொலைத்தானோ அன்றே இயற்கை வளங்களையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தொலைக்கத் தலைப்பட்டு விட்டான்.அவனுக்குத் தேவை செயற்கைச் சுகங்கள். அதை அடைய அதிக பணம் தேவை. அதற்கு இயற்கையைக் கொன்றாவது அவன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும்! ஆடம்பர வாழ்க்கை, துரித உணவு, குளிர்பதன சிற்றூர்தி, வெளிநாட்டு மோகம், எங்கு போவதாக இருந்தாலும்
முதுகில் ஏசியைச் சுமந்து செல்ல வேண்டும். இதற்கெல்லாம் சில பேருக்கு
எந்த வழியிலாவது பணம் ஈட்ட வேண்டும்.
உண்மையில் இப்படிப் பட்டவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு சொத்தைச் சேர்த்து வைக்கவில்லை. நஞ்சைத்தான் சேர்த்து வைக்கிறார்கள்.

இயற்கையை ஒதுக்கி வாழும் இப்படிப் பட்ட வாழ்வில் அவர்கள் வாரிசுகளை
நாளை இயற்கையே ஒதுக்கிவிடும். அதற்கு பெரும் விலை கொடுக்கும் நாள் வெகு தூரத்திலில்லை!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக