வெள்ளி, 30 டிசம்பர், 2011

கல் தெய்வங்கள்

கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்

முட்டினாலும்
மோதினாலும்
அழுதாலும்
கனியாது

திட்டினாலும்
அடித்தாலும்
இரங்காது

சுனாமி புயல்
வந்து அழிந்தாலும்
அழியாது

குற்ற உணர்ச்சியால்
மன்னிப்பு கேட்டாலும்
கிடைக்காது

தப்பித் தவறி
நன்மை நிகழ்ந்து
கண்ணீர் மல்க
நன்றி கூறினாலும்
ஏற்காது

ஊட்டினாலும்
உண்ணாது

கொடுத்தாலும்
வாங்காது

வெறுத்தாலும்
விடாது

இருந்தும்
கல் தெய்வங்களை
எனக்கு மிகவும் பிடிக்கும்

அவை அசையாச்
சொத்துக்கள்


சனி, 17 டிசம்பர், 2011

ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை

கூடங்குளமானாலும்
முல்லைப்பெரியாரானாலும்

2 ஜி ஆனாலும்
வரப்போகும்
3 ஜி 4 ஜி 5 ஜியானாலும்

பெத்த

ஊழலேயானாலும்
தமிழ் மக்களின்
உறவே போனாலும்

எப்போதும்
ஆட்சியாளர்களுக்கு

ஒன்றுமில்லை

http://subramanian-thamirabharani.blogspot.com/

18/12/2011   1pm

வெள்ளி, 9 டிசம்பர், 2011

இணைப்பு

இணைப்பு

ஒன்றோடுன்று இணைவது சுகம்


நாடுகள் இணைவதும் பலம்
புல்லுருவிகள்
தடையிடாவிட்டால்

இணைப்பு அறிவை வளர்க்கும்
பெருமளவில்
புரிந்து கொண்டால்

நதியிணைப்பு தாகம் தீர்க்கும்
பின்
பசியைப்போக்கும்
தலை முறைகளாய்

நாடாள்பவர் இணைந்தால்
மக்கள் நலம்

மேலும் சொல்வதற்கு
ஒன்றுமில்லை

ஒன்றோடொன்று இணைவது சுகம்


09/12/2011  6.55pm

செவ்வாய், 6 டிசம்பர், 2011

அணை - கட்டு

அணை - கட்டு

முல்லைப்பெரியார் பிரச்சனையை இந்த அளவுக்கு பெரிதாக்கியதே கேரள
அமைச்சர்களும், ஊடகங்களும் தான்.

செய்தி ஊடகங்களின் சமீபத்திய போக்கும் அப்படித்தான் இருக்கின்றன.
அரை மணி நேர செய்தி வாசிப்பில் 25 நிமிடங்கள் அணைக்கட்டைப்பற்றியே இருக்கின்றன.

முதலில் இம்மாதிரியான பயமுறுத்தல் நடவடிக்கைகளுக்கு அணை - கட்டவேண்டும். சுமுகமான தீர்வுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப்பற்றி யோசித்து இரு மாநில மக்களுக்கும் தேவையான
நன்மைகள் கிடைக்கும்படிச்செய்ய வேண்டும்.

அதை விடுத்து வன்முறையை கட்டவிழ்த்து விடுவது போன்ற அறிக்கைகளுக்கும், செய்தி வாசிப்புகளுக்கும் அணை - கட்டுவதுதான்
சிறந்தது என்று தோன்றுகிறது.

6/12/2011  7-11pm.

http://subramanian-thamirabharani.blogspot.com/