அது அப்படித்தாங்க.......
இந்த முறை பருவ மழை பொய்க்குமோ என்ற கவலை. பொய்த்தால் அதன்
காரணங்களைக் கூறியே விலைவாசி ஏற்றப்படும்! (இப்ப மட்டும் என்ன வாழுது?) இப்பொழுது கேரளாவில் தினமும் இரவில் 75 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமல் படுத்தப் பட்டிருக்கிறது. மழை இல்லாவிட்டால் இதன் நேரம் இன்னமும் அதிகமாக்கப்படும் என்று தகவல்.
வள்ளுவன் சொன்னது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்!
வான் பொய்த்தால் வாழ்வு பொய்த்துவிடும்!
பொய்க்காமல் பெய்யட்டும் மழை!
----------------------------------------------------------------------
அரசாங்கத்துக்கு உலக வங்கி என்பது என்றும்
தம் மக்களே............
----------------------------------------------------------------------
பெரும்பான்மை இருந்தால் எதையும்
தைரியமாகச் செய்யலாம்!
-----------------------------------------------------------------------