செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உரிமை

உழைப்பதைப் பற்றி கவலையில்லை
வேலை நிறுத்தம் ஒன்றே எங்கள் உரிமை

நாட்டின் நலம்/யாருக்கு வேண்டும் அது
சரி உன் குடும்ப நலம்-அது பாட்டுக்கு நடக்கும்!

எப்படி?

அதை கட்சி பார்த்துக்கொள்ளும்
அது உனக்கு- மற்றவர்களின் நிலை?

அது எங்களுக்கு விஷயமில்லை-மேலும் அது
அவர்களின் கவலை.

நீங்கள் வேலை செய்ய விட்டால்தானே?
-நாங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுகிறோம்

இப்படியே போனால் மக்களின் அன்றாட வாழ்வு?
நாங்கள் கட்சிக்காக வாழ்கிறோம்

சரி! இதற்கு என்னதான் முடிவு?
-வேலை நிறுத்தம் வாழ்க!

http://subramanian-thamirabharani.blogspot.com/


திங்கள், 20 பிப்ரவரி, 2012

நினைவலைகள்

விடுபட்டுப்போன உறவின் உயிர்த்துடிப்பை
நேற்று உணர முடிந்தது

அத்தனை அலைஓசைகளுக்கு மத்தியிலும்
தனியாக வந்து செவிப்பறையைத்
தட்டிய குரல்

நலம் விசாரிக்கத் தோன்றவில்லை-
நலமாகத் தோன்றியதால்

சுற்றிவளைத்துப் பேசினாலும்
மையக்கருத்தென்னமோ-
நாம் மட்டுமே

சூழ்நிலைத் தாக்கத்தால் வேறுபட்டிருந்தாலும்
காலவெள்ளம் கரைசேர்த்தது

-இனி ஒன்றாகிவிடுவோம் என்ற
நம்பிக்கையின் மிச்சத்துடன்--

http://subramanian-thamirabharani.blogspot.com/
20-02-2012   11.45pm