புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ

சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!