வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக