சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm



வெள்ளி, 25 நவம்பர், 2011

Dam 999

வெறும் மொக்கைப்படம்.

கொஞ்ச நாள் வெளி நாட்டில் வாழ்ந்தால் அரை நிக்கர் போட்டுக்கொண்டு
ஹாலிவுட் ரேஞ்சுக்கு படம் பண்ணிப்பணம்  பார்க்கலாம் என்ற ஆசை
போலிருக்கிறது இயக்குனருக்கு. லோக்கல் சினிமா ரேஞ்சுக்கு கூட
படத்தின் தரம் உயரவில்லை.

திரைக்கதையில் ஆயிரம் ஓட்டைகள். தமிழ், ஹிந்தி  நடிக நடிகர்களுடன்
ஒரு சில வெள்ளைக்காரர்களும் இருந்தால் ஹாலிவுட் தரம் கிடைத்து
விடும் என்று தப்புக்கணக்கு போட்டு, இயக்குனர் சூடு போட்டுக்கொண்டதுதான் மிச்சம்.

கேரளாவின் உள் கிராமத்தில் உள்ளவர்களும், பரம்பரையாக குடியிருப்பவர்களும் ஆங்கிலத்திலேயே  பேசிக்கொள்வது சரியான காமெடி.
நடு நடுவே ஒரு ஹிந்திப்பாடல் ஒரு தாலாட்டுப்பாடல் மலையாளத்தில்-
என்றெல்லாம் இடைச்செருகல் வேறு. சகிக்கவில்லை.

ஜோசியத்தை நம்பி காதலித்த பெண் கைவிட எங்கோ அலைந்து திரிந்து
ஒரு திருமணத்தில் பிறந்த பையனுடன் தன் காதலியின் கிராமத்துக்கே
வரும் இளைஞன், தன் காதலியைக்கண்டு மீண்டும் காதலை புதுப்பிக்க
நினைப்பதும், பின்னர் வரும் சில காட்சி அமைப்புகளும் என இடைவேளை
வரை படம் ஜவ்வுகிறது.

அணையை உடைப்பதற்கென ஒரு அரசியல்வாதியின் பொறுப்பற்ற
வில்லத்தனம். இது ஒரு குறியீடு.

அணை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து வரும் காட்சி அமைப்புகளின்
கிராபிக்ஸ் சரியான பல்லிளிப்பு. இதற்கா 50 கோடி செலவானது?

3D யாம். நம்பமுடியவில்லை கண்ணாடியை கழட்டிவிட்டு பார்த்தாலும்
படம் அதைவிட பளிச்சென்று இருக்கிறது. 30 வருடங்களுக்கு முன்
பார்த்த மை டியர் குட்டிச்சாத்தான் இதை விட நல்ல 3D effect கொடுத்ததாக
நினைவு.

மொத்தத்தில் படம் ஒட்டவில்லை. பார்த்தவர்களே வாஷ் அவுட் பண்ணிவிட்டார்கள்.


http://subramanian-thamirabharani.blogspot.com/
.

சனி, 12 நவம்பர், 2011

KF

கிங் பிஷரின் தலைவர் மல்லையா நெருக்கடியில் இருக்கிறாராம்.
உதவச்சொல்லி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக பிரதமர் உதவுவார் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட்
முதலைகளை காங்கிரஸ் என்றுமே கை விட்டதில்லை. முதலில்
மறுப்பது போல் நாடகமாடி வேறு பிரச்சனைகளுக்கு மக்களை திசை திருப்பி சத்தமேயில்லாமல் காரியத்தை முடித்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான பணத்தில் புரளும் மல்லையாவின் உதவி அடுத்த
தேர்தலுக்கு கண்டிப்பாகத்தேவைப்படுமே.

அதற்காகவாவது காங்கிரஸ் தலைமை இப்போதைய நெருக்கடியிலிருந்து
மீள மல்லையாவிற்கு உதவி செய்யும். சாதாரண மக்களின் துன்பங்களைக்கண்டு முகத்தை திருப்பிச்செல்லும் பிரதமர், மல்லையா
போன்ற முதலைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

இந்த உதவி மட்டும் மல்லையாவிற்கு கிடைத்துவிட்டால் இதையே ஒரு
உதாரணமாகக்கொண்டு அம்பானி போன்ற கார்பரேட் பெரு முதலைகள்
நாளையே ஒரு நீளமான நஷ்டக்கணக்கை காண்பித்து அரசின்
உதவியைக்கோரும் நிலைமையும் வரலாம்.

எதையும் தாங்கும் இதயம்தான் இந்திய மக்களுக்கு உண்டே!!!

சனி, 5 நவம்பர், 2011

வானுயர 3

மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு. பயந்தது போலவே காரியங்கள் நடந்து
கொண்டிருக்கின்றன. நிதியமைச்சர் 'இதில் சர்க்கார் ஒன்றும் செய்ய இயலாது. நஷ்டத்தைக்குறைக்க எண்ணெய் கம்பனிகள் எடுக்கும் முடிவு'
என்கிறார். பிரதமரோ பிரான்சில் இருந்துகொண்டே 'இது தவிர்க்கமுடியாதது. டீசல்,  சமையல்எரிவாயு போன்றவைகளின் விலை
கட்டுப்பாட்டையும் சர்க்கார் கைவிட யோசிப்பதாகவும். மக்கள் இதை புரிந்து 
கொள்ளவேண்டும் என்றும் பிரதமர் முன் ஜாமீன் எடுத்திருக்கிறார்.

மேல் மட்டத்திலேயே புழங்கும் அமைச்சர்கள், பிரதமர் பார்வையில் நாடு 
சுபிட்சமாகத்தான் இருக்கிறது. குடியிருக்கும் வீடு ஏசி , பறக்கும் விமானம் ஏசி,
பயணிக்கும் கார் ஏசி, கிட்டும் சம்பளம் அப்படியே வங்கிக்கணக்கில், செலவுகள் 
மொத்தம் மக்களின் வரிப்பணத்தில். ஏன் பேசமாட்டார்கள் ?

நாட்டில் முக்கால் விழுக்காடு மக்கள் விலையேற்றத்தால் விழி பிதுங்கி 
வழியறியாது நிற்க வரிப்பணத்தில் சுக ஜீவிதம்  நடத்தும் மந்திரிகள், விலையேற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டுமாம்-சொல்கிறார்கள்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்திய பெரும் முதலைகளின் கருப்புப்பணத்தை
வெளிக்கொணர்ந்தாலே போதும். பெரும்பாலான பிரச்சனைகளுக்கு
தீர்வு காணலாம். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் பண முதலைகளின் உதவி  காங்கிரஸ் அரசுக்குத்தேவை.

நமது பிரதமர் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. அவ்வப்போது
வெளிநாடு செல்வது. போய் வந்த விஷயங்களை பள்ளி சென்றுவந்த
குழந்தைகள் அன்று என்ன நடந்தது என்று அம்மாவிடம் சொல்லுமே,
அதே போல் சோனியாஜி இடம் சொல்வது, கிரிக்கெட்டில் அம்பயர்,
நாலு ரன் எடுத்தால் இடமும் வலமும் காட்டுவது போல் கையை ஆட்டுவது , சோனியாஜியின் முகம் கோணாமல் நடப்பது 
இவையெல்லாம் தான் இவர் வேலை.

மற்றபடி மக்களை பிழியும் விலைவாசி ஏற்றம் எல்லாம் பிரதமருக்கு ஒரு 
பொருட்டே அல்ல.

பழகச்சொல்கிறார். மிகச்சிறந்த பொருளாதார மேதை, மக்கள் விலையேற்றத்தை புரிந்து சகித்து கொள்ளச்சொல்கிறார்.

சகித்துக்கொள்ளத்தானே மக்கள்.

சுகித்து வாழத்தானே மந்திரிகள்.





மெல்ல தமிழன் இனி

மெல்ல தமிழன் இனி


பிரதமரின் பத்திரிகையாளர்களின் கூட்டம். எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேடையில் காபினட் அமைச்சர்கள் எல்லோருமே ஆஜர். நிருபர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது பிரச்சனையா?
சிலபேர் தைரியமாக அமைச்சர்களிடம் கேட்டபோது 'பொறுமை பொறுமை
இதோ பிரதமர் வந்துவிடுவார்' என்றனர் .

பிரதமர் வந்ததும் நிருபர்களுக்குள் பரபரப்பு தோன்றியது. பிரதமர் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நண்பர்களே நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்' பிரதமர்
உரையை துவங்கியதும் நிருபர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
'என்ன சார் ஏதாவது அந்நிய நாட்டு படைஎடுப்பா? அல்லது வேறு ஏதாவது'
நிருபர்கள் சாரமாரியாக கேள்விகள் கேட்கவும், பிரதமர் 'ச்சே ச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே இருந்தாலும் நாம் சமாளித்து விடுவோம். இது மிகவும் முக்கியமான விஷயம். சொல்கிறேன்' என்றவர்
'நாங்கள் காபினட் அமைச்சர்கள் மூன்று நாட்களாக சரியாக
சாப்பிடவில்லை, தூங்கவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறோம்.
நம்ம சோனியாஜி வீட்டிலும் அவருடைய சித்தப்பாஜி வீட்டிலும் பைப்
லைன் உடைந்து தண்ணீர் வரவில்லை. நாங்கள் மூன்று நாட்கள்
எங்கிருந்தெல்லாமோ ஆட்களை வரவழைத்து சரி செய்ய முயன்றும்
ஒன்றும் நடக்கவில்லை. சோனியாஜி கடுங்கோபத்தில் இருக்கிறார்.'

நிருபர்கள் சிரித்தனர். பிரதமர் கோபத்துடன் 'இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல. எங்கள் நிலைமையில் நீங்கள் இருந்து பார்க்கவேண்டும்.
நாடு எவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கிறது என்று அப்போதுதான்
உங்களுக்கு புரியும்'.

நிருபர்கள் மீண்டும் பலமாகச்சிரிக்க பிரதமர் கடுங்கோபத்துடன் 'நிறுத்துங்கள் சிரிக்காதீர்கள். இதோ பார்த்தீர்களா என்று ஒரு பேப்பரை
தூக்கி காட்டி 'இது பைப் லைனை சரியாக்க முப்படைகளையும் அழைக்கும் ஆர்டர். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.'

இப்போது நிருபர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று. பிரதமர் தொடர்ந்தார். நண்பர்களே கேளுங்கள் நாங்கள் இப்படி ஒரு தீர்மானத்தில் இருக்கும்
போதுதான் நண்பர் ராஜபக்ஷேயிடமிருந்து ஒரு தகவல் வந்தது.'

இப்போது நிருபர்கள் அமைதியாகிவிட்டனர். நமது சோனியாஜியின் மனதை
குளிர்விக்கவும், இலங்கை தமிழர்களின் மறு வாழ்வுக்கும் சேர்த்து ஒரு
ஐடியா ராஜபக்ஷே கூறியிருக்கிறார். அதை விளக்குகிறேன்.

'இலங்கையிலிருந்து ஒரு மிகப்பெரிய பைப் லைன் சோனியாஜியின் வீடு வரை நிர்மாணிக்கப்படும். அந்த பைப் லைன் வழியாக இலங்கை தமிழர்களின் ரத்தம் பம்ப் பண்ணி, நவீன தொழில் நுட்ப உதவியுடன்
தண்ணீராக மாற்றி அவரின் வாட்டர் டாங்கில் சேமிக்கப்படும்.
ரத்தம் தங்கு தடையில்லாமல் கிடைக்க இலங்கை தமிழர்களுக்கு
சத்தான ஆகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு உடுக்க உடை  இருக்க
வசதியான வீடு இப்படி பல உதவிகள் இந்தியாவே செய்யும்.

ஒரே நேரத்தில் சோனியாஜியின் மனமும் குளிரும். நண்பர் ராஜபக்சேயின்
உறவும் பலப்படும். சோனியாஜி 'பழசை' நினைத்து அடிக்கடி ஆவேசம் 
கொள்வதும் குறையும்.

அது மட்டுமல்ல உங்கள் தமிழகத்தின் செம்மொழித்தலைவர் இதற்கு ஒப்புதலும் 
அளித்துள்ளார் . அவரே அவருடைய தொலைக்காட்சியில் இது பற்றிய 
அறிவிப்பும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். 'தமிழர்களே, தமிழர்களே என்னைத்தூக்கி கடலில் போடுங்கள். நான் பைப் லைனாக மாறி 
அன்னை சோனியா அவர்களின் வீட்டுக்கு இலங்கை தமிழர்களின் ரத்தத்தை 
கொண்டு செல்கிறேன். தமிழர்களின் மறுவாழ்வுக்கு நானும் என்னாலான 
சிறிய உதவியை செய்தேன் என்று நாளை சரித்திரம் சொல்லட்டும்' 

பிரதமர் தொடர்ந்தார் 'இதற்கு கைமாறாக ராஜபக்சேவுக்கு ஒரு சிறு உதவியை இந்தியா செய்ய வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க போகும்போது இலங்கை படையினர் தினமும் இரண்டே இரண்டு மீனவர்களை மட்டும் சுட்டு கொல்வார்கள். அதற்கான ஒத்துழைப்பை மட்டும் நாம் கொடுத்தால் போதும். மேலும் தமிழர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
எதுவும் தேவையில்லை. எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ளலாம். ஒரு 'குறிப்பிட்ட' வயது வரை அரசாங்கமே
அவர்களது பராமரிப்பை ஏற்றுக்கொள்ளும்'

நிருபர்கள் விக்கித்து நிற்க  'சரி எல்லோரும் பசியாக இருப்பீர்கள். உங்களுக்காக 'இத்தலி, சட்னி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயிறு
நிறைய சாப்பிடுங்கள். உங்களுக்கு தெரியுமா சோனியாஜி மிகவும்
விரும்புவது தமிழ்நாட்டின் இந்த 'இத்தலி' சட்னி தான். அந்த வகையில் 
தமிழர்கள் கொடுத்து  வைத்தவர்கள்.