சனி, 12 நவம்பர், 2011

KF

கிங் பிஷரின் தலைவர் மல்லையா நெருக்கடியில் இருக்கிறாராம்.
உதவச்சொல்லி பிரதமரிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

கண்டிப்பாக பிரதமர் உதவுவார் என்றே தோன்றுகிறது. கார்ப்பரேட்
முதலைகளை காங்கிரஸ் என்றுமே கை விட்டதில்லை. முதலில்
மறுப்பது போல் நாடகமாடி வேறு பிரச்சனைகளுக்கு மக்களை திசை திருப்பி சத்தமேயில்லாமல் காரியத்தை முடித்து விடுவார்கள்.

கோடிக்கணக்கான பணத்தில் புரளும் மல்லையாவின் உதவி அடுத்த
தேர்தலுக்கு கண்டிப்பாகத்தேவைப்படுமே.

அதற்காகவாவது காங்கிரஸ் தலைமை இப்போதைய நெருக்கடியிலிருந்து
மீள மல்லையாவிற்கு உதவி செய்யும். சாதாரண மக்களின் துன்பங்களைக்கண்டு முகத்தை திருப்பிச்செல்லும் பிரதமர், மல்லையா
போன்ற முதலைகள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார்.

இந்த உதவி மட்டும் மல்லையாவிற்கு கிடைத்துவிட்டால் இதையே ஒரு
உதாரணமாகக்கொண்டு அம்பானி போன்ற கார்பரேட் பெரு முதலைகள்
நாளையே ஒரு நீளமான நஷ்டக்கணக்கை காண்பித்து அரசின்
உதவியைக்கோரும் நிலைமையும் வரலாம்.

எதையும் தாங்கும் இதயம்தான் இந்திய மக்களுக்கு உண்டே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக