சனி, 5 நவம்பர், 2011

மெல்ல தமிழன் இனி

மெல்ல தமிழன் இனி


பிரதமரின் பத்திரிகையாளர்களின் கூட்டம். எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேடையில் காபினட் அமைச்சர்கள் எல்லோருமே ஆஜர். நிருபர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதாவது பிரச்சனையா?
சிலபேர் தைரியமாக அமைச்சர்களிடம் கேட்டபோது 'பொறுமை பொறுமை
இதோ பிரதமர் வந்துவிடுவார்' என்றனர் .

பிரதமர் வந்ததும் நிருபர்களுக்குள் பரபரப்பு தோன்றியது. பிரதமர் முகத்திலிருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

'நண்பர்களே நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம்' பிரதமர்
உரையை துவங்கியதும் நிருபர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
'என்ன சார் ஏதாவது அந்நிய நாட்டு படைஎடுப்பா? அல்லது வேறு ஏதாவது'
நிருபர்கள் சாரமாரியாக கேள்விகள் கேட்கவும், பிரதமர் 'ச்சே ச்சே அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியே இருந்தாலும் நாம் சமாளித்து விடுவோம். இது மிகவும் முக்கியமான விஷயம். சொல்கிறேன்' என்றவர்
'நாங்கள் காபினட் அமைச்சர்கள் மூன்று நாட்களாக சரியாக
சாப்பிடவில்லை, தூங்கவில்லை. மிகவும் கவலையாக இருக்கிறோம்.
நம்ம சோனியாஜி வீட்டிலும் அவருடைய சித்தப்பாஜி வீட்டிலும் பைப்
லைன் உடைந்து தண்ணீர் வரவில்லை. நாங்கள் மூன்று நாட்கள்
எங்கிருந்தெல்லாமோ ஆட்களை வரவழைத்து சரி செய்ய முயன்றும்
ஒன்றும் நடக்கவில்லை. சோனியாஜி கடுங்கோபத்தில் இருக்கிறார்.'

நிருபர்கள் சிரித்தனர். பிரதமர் கோபத்துடன் 'இது சிரிக்க வேண்டிய விஷயமல்ல. எங்கள் நிலைமையில் நீங்கள் இருந்து பார்க்கவேண்டும்.
நாடு எவ்வளவு பெரிய பிரச்சனையில் இருக்கிறது என்று அப்போதுதான்
உங்களுக்கு புரியும்'.

நிருபர்கள் மீண்டும் பலமாகச்சிரிக்க பிரதமர் கடுங்கோபத்துடன் 'நிறுத்துங்கள் சிரிக்காதீர்கள். இதோ பார்த்தீர்களா என்று ஒரு பேப்பரை
தூக்கி காட்டி 'இது பைப் லைனை சரியாக்க முப்படைகளையும் அழைக்கும் ஆர்டர். ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.'

இப்போது நிருபர்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.

சிரிப்பொலி அடங்க ரொம்ப நேரமாயிற்று. பிரதமர் தொடர்ந்தார். நண்பர்களே கேளுங்கள் நாங்கள் இப்படி ஒரு தீர்மானத்தில் இருக்கும்
போதுதான் நண்பர் ராஜபக்ஷேயிடமிருந்து ஒரு தகவல் வந்தது.'

இப்போது நிருபர்கள் அமைதியாகிவிட்டனர். நமது சோனியாஜியின் மனதை
குளிர்விக்கவும், இலங்கை தமிழர்களின் மறு வாழ்வுக்கும் சேர்த்து ஒரு
ஐடியா ராஜபக்ஷே கூறியிருக்கிறார். அதை விளக்குகிறேன்.

'இலங்கையிலிருந்து ஒரு மிகப்பெரிய பைப் லைன் சோனியாஜியின் வீடு வரை நிர்மாணிக்கப்படும். அந்த பைப் லைன் வழியாக இலங்கை தமிழர்களின் ரத்தம் பம்ப் பண்ணி, நவீன தொழில் நுட்ப உதவியுடன்
தண்ணீராக மாற்றி அவரின் வாட்டர் டாங்கில் சேமிக்கப்படும்.
ரத்தம் தங்கு தடையில்லாமல் கிடைக்க இலங்கை தமிழர்களுக்கு
சத்தான ஆகாரம் வழங்கப்படும். அவர்களுக்கு உடுக்க உடை  இருக்க
வசதியான வீடு இப்படி பல உதவிகள் இந்தியாவே செய்யும்.

ஒரே நேரத்தில் சோனியாஜியின் மனமும் குளிரும். நண்பர் ராஜபக்சேயின்
உறவும் பலப்படும். சோனியாஜி 'பழசை' நினைத்து அடிக்கடி ஆவேசம் 
கொள்வதும் குறையும்.

அது மட்டுமல்ல உங்கள் தமிழகத்தின் செம்மொழித்தலைவர் இதற்கு ஒப்புதலும் 
அளித்துள்ளார் . அவரே அவருடைய தொலைக்காட்சியில் இது பற்றிய 
அறிவிப்பும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். 'தமிழர்களே, தமிழர்களே என்னைத்தூக்கி கடலில் போடுங்கள். நான் பைப் லைனாக மாறி 
அன்னை சோனியா அவர்களின் வீட்டுக்கு இலங்கை தமிழர்களின் ரத்தத்தை 
கொண்டு செல்கிறேன். தமிழர்களின் மறுவாழ்வுக்கு நானும் என்னாலான 
சிறிய உதவியை செய்தேன் என்று நாளை சரித்திரம் சொல்லட்டும்' 

பிரதமர் தொடர்ந்தார் 'இதற்கு கைமாறாக ராஜபக்சேவுக்கு ஒரு சிறு உதவியை இந்தியா செய்ய வேண்டும். அது வேறு ஒன்றுமில்லை
தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க போகும்போது இலங்கை படையினர் தினமும் இரண்டே இரண்டு மீனவர்களை மட்டும் சுட்டு கொல்வார்கள். அதற்கான ஒத்துழைப்பை மட்டும் நாம் கொடுத்தால் போதும். மேலும் தமிழர்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு
எதுவும் தேவையில்லை. எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ளலாம். ஒரு 'குறிப்பிட்ட' வயது வரை அரசாங்கமே
அவர்களது பராமரிப்பை ஏற்றுக்கொள்ளும்'

நிருபர்கள் விக்கித்து நிற்க  'சரி எல்லோரும் பசியாக இருப்பீர்கள். உங்களுக்காக 'இத்தலி, சட்னி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வயிறு
நிறைய சாப்பிடுங்கள். உங்களுக்கு தெரியுமா சோனியாஜி மிகவும்
விரும்புவது தமிழ்நாட்டின் இந்த 'இத்தலி' சட்னி தான். அந்த வகையில் 
தமிழர்கள் கொடுத்து  வைத்தவர்கள். 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக