சனி, 26 நவம்பர், 2011

பயம்

பயம்

அத்துடன் அலட்சியம். இரு மாநிலங்களுக்கிடையேயான புரிதலில்லாத
ஒரு விஷயமாக முல்லைப்பெரியார் பிரச்சினை ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீப காலமாக அடிக்கடி உண்டாகும் சிறு சிறு பூமி அதிர்வுகள், எப்போது
பெரிதாகுமோ என்று கவலைப்படும் கேரளம். தண்ணீர் கிடைக்காதோ
என்று ஆதங்கப்படும் தமிழகம்.

பழைய அணைக்கட்டின் பலவீனம் - அது எங்காவது பூமி அதிர்வினால்
உடைந்தால் பல லட்சம் உயிர்கள் பலியாகுமே என்ற கேரளத்தின்
கவலையில் நியாயமில்லை என்று சொல்ல முடியாது.

அதே நேரத்தில் புதிய அணைக்கட்டு நிர்மாணித்தால் தங்களுக்கு தண்ணீர்
கிடைக்காமல் போய்விடுமோ என்ற தமிழகத்தின் சந்தேகத்தையும்
குறை கூற முடியாது.

உடனடியாக மத்திய அரசு இரு மாநில முதல்வர்களையும், மற்றும்
முதன்மையான பொறியியல் வல்லுனர்களையும் அவர்களோடு
உன்னத நீதிமான்களையும் சேர்த்து போர்க்கால அடிப்படையில்
ஆலோசனை நடத்த வேண்டும்.

காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமல் திறந்த மனதுடன் மக்களின்
நலனுக்காக (நம் இந்திய மக்கள் ) என்ற நினைப்புடன் பேச்சு
வார்த்தை நடத்தவேண்டும்.

கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும். மக்களின் பயத்தையும்
சந்தேகத்தையும் போக்குவது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

என் பூமி, என் தண்ணீர், என்றெல்லாம் வித்தியாசம் பார்க்காமல்
நம் மக்களின் வாழ்வு என்ற  எண்ணத்துடன் செயல் பட்டால்
நிச்சயமாக ஒரு விடிவு கிடைக்கும்.

அரசியல் உள் நோக்கம் எல்லாம் தேவையேயில்லை. மக்களிடம் வித்தியாசம் பார்க்காமல் அவர்களுக்காக நல்லதைச்செய்யும்
அரசியல்வாதிகளுக்கு என்றும் தோல்வியில்லை.

முதலில் நம் இந்திய மக்கள் என்ற நினைப்பு வரவேண்டும். மாநிலப்பிரிவினைகள் நமக்குள் தேவையில்லை.

பயம், சந்தேகமில்லாத வாழ்க்கை, மக்களுக்கு இதற்கான அடித்தளம் அமைய
இரு மாநில முதல்வர்களும் முயன்றால் அது சரித்திரத்தில் ஒரு பொன்
எழுத்துக்களாக பொறிக்கப்படும்.

http://subramanian-thamirabharani.blogspot.com/

Date 27/11/2011 - 1.11pm



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக