சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக