சனி, 21 ஜூன், 2014

புதுசு

பதுசு

எது என்று தெரிவதில்லை
எதுவும்!
ஆசையோடு நெருங்குகையில்
தோன்றுமது!

முடிந்ததும் தோன்றும் -

அது சென்ற கணத்தின்
புதுசென்று

வெந்த சோறு புதுசு

அடுத்த நாள் தண்ணி
ஊற்றிய அதே சோறு
அப்போதைய பசிக்கு
புதுசு!

ஒவ்வொரு முறை
வரும் பசியும்
புதுசு.

அடங்கிப் பின்
வருவதும்

அதே பழைய
புதுசு.........

2 கருத்துகள்:

  1. மிகச் சரி
    அனைத்திற்கும் பொருந்தும் கருத்து
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு