ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஏலே!

லே! நான் தின்னேலி லே!

திருநெல்வேலின்னா  லே ஒரு மெதப்புதாம்   லே!



அந்த லே க்கு அப்படி ஒரு இணைப்பு பாசம்! சென்ற வாரம் நெல்லைக்குச் சென்று வந்த பிறகும் மனசு அங்ஙனயேதான் சுத்திக்கிட்டிருக்கு. தாமிரபரணியில் நல்ல குளியல். கல்லிடையில் தாமிரபரணிக் குளியலுக்கு அப்படி ஒரு சுகம். வயது 70 ஐத் தாண்டியவர்களும்
தினமும் ஆற்றில் குளித்து ஆரோக்கியத்தைப் பேணுகிறார்கள்! வற்றாத ஜீவ நதி! நெல்லை மக்களின் தாய் தாமிரபரணி!

இருட்டுக் கடை அல்வாவின் தனிச்சுவைக்கே தாமிரபரணிதான் காரணம்! அந்த நதி ஓடும் பாதையெல்லாம் செழிப்புக்குப் பஞ்சமில்லை! புராணம் ராமாயண மகாபாரத காலத்திலும் தாமிரபரணியின் புகழ் ஓங்கியிருந்தது.

அதன் கரைகளில்தான் எத்தனை புகழ் வாய்ந்த புராதன கோயில்கள்! சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த நதிக்கரை! 

அரசியல் மற்றும் பணமுதலைகளிடமிருந்து அந்த நதியைக் காப்பாற்றுவது நெல்லை மக்களின் தலையாய கடமை! தாமிரபரணியை மறந்தால் நம் வாழ்வை மட்டுமல்ல எதிர்கால சந்ததியையே நாம் மறக்கிறோம்!

தாமிரபரணியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்!


லே! தாமிரபரணி லே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக