ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

வெளிநாடு

திரைகடலோடி திரவியம் தேடு. நல்ல விஷயம்தான்.அப்படித்தேடாதவர்கள்
தேட இயலாதவர்கள், என்ன பாவம் செய்தார்கள்? சமூகத்தில் அவர்களை கீழான பார்வையோடு அளப்பவர்களை என்ன செய்வது? முக்கியமாக கல்யாணச் சந்தையில். அதிலும் பெண்ணைப் பெற்றவர்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை கண்டிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதுதான் வேடிக்கை. கை நிறைய சம்பாதிக்கும் உள்ளூர் மாப்பிள்ளை இவர்களைப் பொறுத்தவரை சொத்தைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் அவர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்குமே! பிறகு கொம்பு முளைத்த தலையோடு சொந்தக்காரர்களிடம் சொல்லிச்சொல்லி கும்மியடிக்கலாமே என்ற தணியாத ஆசைதான்!

உள்ளூர் மாப்பிள்ளையை ஒதுக்குவதன் மூலம் ஒருவேளை வேறுபல இனிமையான, நிம்மதியான வாழ்க்கை சந்தர்ப்பங்களை உங்கள் பெண்ணுக்கு கிடைக்க விடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை!

http://subramanian-thamirabharani.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக