எதுவும் புரியாமலிருப்பதே
சுகம்
புரிந்தால் சுமையாகிவிடும்
சுமைகள் புரியாமலிருப்பது
லேசாக இருப்பதின்
துல்லியம்
சுமை அடையாளமல்ல
அது தேவையுமல்ல
இருந்தும் சுமைகளால்
மட்டுமே வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கை
அதைப் புரிந்து கொள்ளச்
சென்றால் ஏறிக் கொள்ளும்
பாரம்
வெறும் பார்வை
பாரத்துடன்
கட்டமைக்கப் படுவதும்
ஏதோ ஒரு
விதத்தில்
சுமையே!
சுகம்
புரிந்தால் சுமையாகிவிடும்
சுமைகள் புரியாமலிருப்பது
லேசாக இருப்பதின்
துல்லியம்
சுமை அடையாளமல்ல
அது தேவையுமல்ல
இருந்தும் சுமைகளால்
மட்டுமே வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கை
அதைப் புரிந்து கொள்ளச்
சென்றால் ஏறிக் கொள்ளும்
பாரம்
வெறும் பார்வை
பாரத்துடன்
கட்டமைக்கப் படுவதும்
ஏதோ ஒரு
விதத்தில்
சுமையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக