வியாழன், 2 ஜூன், 2016

புரிதல்

எதுவும் புரியாமலிருப்பதே
சுகம்

புரிந்தால் சுமையாகிவிடும்
சுமைகள் புரியாமலிருப்பது
லேசாக இருப்பதின்
துல்லியம்

சுமை அடையாளமல்ல
அது தேவையுமல்ல

இருந்தும் சுமைகளால்
மட்டுமே வடிவமைக்கப்பட்ட
வாழ்க்கை

அதைப் புரிந்து கொள்ளச்
சென்றால் ஏறிக் கொள்ளும்
பாரம்

வெறும் பார்வை
பாரத்துடன்
கட்டமைக்கப் படுவதும்

ஏதோ ஒரு
விதத்தில்
சுமையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக