செவ்வாய், 31 மே, 2016

நவ ரசம்

ஒவ்வொரு கணமும்
உரசிச் செல்லும்
பயங்கள் -
ஏதோ ஒரு விதத்தில்

உள்ளிலும் வெளியிலுமாய்
சுற்றித் திரிவதொன்றே என
கண் கட்டும்

ஆற்றொணா நினைவழுத்தல்கள்
தொக்கி நிற்பதும் - வேற்றுணர்வின்றி
வேராய் ஓடுவதும் நாராசமெனினும்

அது ஏனோ நவரசமும் கலந்தது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக