வெள்ளி, 27 மே, 2016

அது அவ்வாறு

அவ்வாறு இருப்பது மட்டுமே
அவ்வாறான காரணங்களைத்
தோற்றுவிக்கிறது

பாதைகள் முடிவில்லாமல்
சென்றாலும் பயணங்கள்
என்றாவது முடிந்துதான்
தீரவேண்டும்

விரக்தி எதிலும்
ஒட்டுவதில்லை

தெரிந்து ஒன்றும்
செய்யப்போவதில்லை
தெரிவது மட்டுமே

தீர்வுமில்லை

அப்படியே நகரட்டும்
வாழ்க்கையின்
நிகழ்வுகள்

மாற்றங்கள் தானே
மாறிக் கொள்ளும்

அவ்வாறான காரணமும்
அவ்வாறே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக