ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வேட்டியோபநிஷத் 2

மீண்டும் வேட்டி புராணம். வேட்டி தென்னிந்தியாவுக்கு உரித்தானது என்றாலும் தமிழகம், கேரளம், கர்நாடகா இம்மூன்று மாநிலங்களில்தான் அதிகமாக  உபயோகிக்கின்றனர். ஆந்திராவில் கூடுதலும் பஞ்சக்கச்சம் முறைதான்.
அன்று தமிழ் சினிமாவில் எம்ஜியார் வேட்டி கட்டி நடித்த படங்கள் கருப்பு வெள்ளையில் அதிகம் என்றாலும் கலருக்கு மாறியபின் சற்று குறைவே எனலாம். ஏதோ தங்கச்சி, அம்மா என்று வீட்டில் பாசமுடன் பழகும்போது வேட்டியில் இருக்கும் அவர், அடுத்து காதலியை பார்க்கும்போதும், அதற்கு அடுத்த சண்டைக்காட்சிகளுக்கும் பாண்டுக்கு மாறியிருப்பார்.
மலையாளப்படங்களில் அனைத்து ஹீரோக்களும் அன்று வேட்டியில்தான்
உலா வருவார்கள். பான்ட் அபூர்வம்தான்.
வேட்டி கட்டிய ஹீரோக்கள் வயல் வெளியிலோ நதிக்கரையிலோ ஹீரோயினுடன் யேசுதாஸ் குரலில் பாடியபடியே செல்லும் காட்சிகள்
முக்கால்வாசி எல்லாப்படங்களிலும் இருக்கும்.
பிரேம் நசீர், மது போன்ற பல ஹீரோக்கள் ஜெயபாரதியுடன் பாடிச்செல்லும் காட்சிகள் நிறையவே இடம் பெறும்.
இந்த இடத்தில் ஜெயபாரதியைப்பற்றி ஒரு வார்த்தை.
தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோக்களுடனும் காதல் காட்சிகளில் ஜெயபாரதி மிக அழகாக இழைந்து இணைந்து மிக நெருக்கமாக நடிப்பார்.
அவர் கண்களிலும் முகத்திலும்  தெரியும் அந்த காதல்காம உணர்ச்சியை இன்று வரை வேறு எந்த நடிகையும் காட்டியதாக நினைவில்லை .
படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனையும் 'நட்டு' வனாராக்கும் திறமை
அவர் ஏற்றிருந்த கதாபத்திரங்களுக்கு இருந்தது.
வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம் போன்ற பல படங்கள் இதற்கு உதாரணம்.
படம் பார்த்து வெளியே வரும் ஒவ்வொருத்தனும் பேய் அறைஞ்சா மாதிரி
வெளியே வருவான். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒன்றுமே ஓடாது. கூடவே 
வரும்.
அன்று மலையாளத்தில் வேட்டி கட்டிய கதை, கதாபத்திரங்களுக்கு இணையாக 
ஜெயபாரதியின் பாத்திர அமைப்பும் அருமையாக இருந்தன.
இன்றும்  மோகன்லால் மம்மூட்டி போன்ற நடிகர்கள் வேட்டி கட்டும் கதா பாத்திரங்களில் நிறையவே நடிக்கிறார்கள்.
புது முக நாயகர்களான ப்ரித்விராஜ் திலீப் போன்ற இளைய தலைமுறை
நடிகர்களும் வேட்டியுடன் வரும் கேரக்டர்கள் நிறையவே பண்ணுகிறார்கள்.
தமிழில்தான் வேட்டிக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கான பாத்திர அமைப்பு அவர்களுக்கு ஏற்படவில்லையோ அல்லது அவர்களுக்கு பிடிக்கவில்லையோ தெரியவில்லை.
கேரளாவில் இன்றும் இளைய தலைமுறைகள் வேட்டி உடுத்துகிறார்கள்.
அவர்களுக்கு அது பிடித்தமானதும் கூட.
இன்றைய தமிழக இளைஞர்கள் வேட்டியை கை விடாமல் இருந்தால் சரி.
சூப்பர் ஸ்டார் சொல்வது போல் 'நாங்க பழக வந்திருக்கோம்' என்று சொல்லிக்கொண்டே வேட்டியுடன் பழகுங்கள்
பழகினால் பிடித்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக