பதுசு
எது என்று தெரிவதில்லை
எதுவும்!
ஆசையோடு நெருங்குகையில்
தோன்றுமது!
முடிந்ததும் தோன்றும் -
அது சென்ற கணத்தின்
புதுசென்று
வெந்த சோறு புதுசு
அடுத்த நாள் தண்ணி
ஊற்றிய அதே சோறு
அப்போதைய பசிக்கு
புதுசு!
ஒவ்வொரு முறை
வரும் பசியும்
புதுசு.
அடங்கிப் பின்
வருவதும்
அதே பழைய
புதுசு.........