சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!

புதன், 23 மே, 2012

தவிர்க்க முடியாதது

காரணங்கள் காரணமின்றியே அலைக்கழிக்கும்!
ஈர்ப்பு - இது ஒன்றுதான் பிரதானம்!
விஷயங்கள் தாக்கும்போது எண்ணங்கள் ஓய்வெடுப்பதில்லை!
விளைவுகளைப் பற்றி யோசிக்கவும் நேரமில்லை!

தனக்குள் சுரப்பதை வெளிக்கொணர முயற்சி தேவையேயில்லை!
உந்துதலே பல்லக்குத் தூக்கும்!

தாக்கப்படும்போது தடுப்பது அறிவீனம் - தானே கிடைப்பதை
தள்ளி விடுவதும் பலவீனம்!
தொடங்கியபின் தோரணம் கட்டுவதே சுகம்!


ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

வெளிநாடு

திரைகடலோடி திரவியம் தேடு. நல்ல விஷயம்தான்.அப்படித்தேடாதவர்கள்
தேட இயலாதவர்கள், என்ன பாவம் செய்தார்கள்? சமூகத்தில் அவர்களை கீழான பார்வையோடு அளப்பவர்களை என்ன செய்வது? முக்கியமாக கல்யாணச் சந்தையில். அதிலும் பெண்ணைப் பெற்றவர்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை கண்டிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதுதான் வேடிக்கை. கை நிறைய சம்பாதிக்கும் உள்ளூர் மாப்பிள்ளை இவர்களைப் பொறுத்தவரை சொத்தைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் அவர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்குமே! பிறகு கொம்பு முளைத்த தலையோடு சொந்தக்காரர்களிடம் சொல்லிச்சொல்லி கும்மியடிக்கலாமே என்ற தணியாத ஆசைதான்!

உள்ளூர் மாப்பிள்ளையை ஒதுக்குவதன் மூலம் ஒருவேளை வேறுபல இனிமையான, நிம்மதியான வாழ்க்கை சந்தர்ப்பங்களை உங்கள் பெண்ணுக்கு கிடைக்க விடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை!

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 3 மார்ச், 2012

தொடர்பு

ஒன்றுக்கொன்று தொடர்பான விஷயங்கள்தான் நம்மிடையே
இரத்தத்தில் ஆரம்பித்து இலக்கியம் வரை.

பசியிலிருந்து உணவுவரை
இருளிலிருந்து விடியல்வரை - எனினும்

நிரந்தரமில்லாதவைக்குத்தான் அடித்துக்கொள்கிறோம்
கடைசிவரை.

http://subramanian-thamirabharani.blogspot.com/

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

உரிமை

உழைப்பதைப் பற்றி கவலையில்லை
வேலை நிறுத்தம் ஒன்றே எங்கள் உரிமை

நாட்டின் நலம்/யாருக்கு வேண்டும் அது
சரி உன் குடும்ப நலம்-அது பாட்டுக்கு நடக்கும்!

எப்படி?

அதை கட்சி பார்த்துக்கொள்ளும்
அது உனக்கு- மற்றவர்களின் நிலை?

அது எங்களுக்கு விஷயமில்லை-மேலும் அது
அவர்களின் கவலை.

நீங்கள் வேலை செய்ய விட்டால்தானே?
-நாங்கள் கட்சித் தலைமைக்கு கட்டுப்படுகிறோம்

இப்படியே போனால் மக்களின் அன்றாட வாழ்வு?
நாங்கள் கட்சிக்காக வாழ்கிறோம்

சரி! இதற்கு என்னதான் முடிவு?
-வேலை நிறுத்தம் வாழ்க!

http://subramanian-thamirabharani.blogspot.com/


திங்கள், 20 பிப்ரவரி, 2012

நினைவலைகள்

விடுபட்டுப்போன உறவின் உயிர்த்துடிப்பை
நேற்று உணர முடிந்தது

அத்தனை அலைஓசைகளுக்கு மத்தியிலும்
தனியாக வந்து செவிப்பறையைத்
தட்டிய குரல்

நலம் விசாரிக்கத் தோன்றவில்லை-
நலமாகத் தோன்றியதால்

சுற்றிவளைத்துப் பேசினாலும்
மையக்கருத்தென்னமோ-
நாம் மட்டுமே

சூழ்நிலைத் தாக்கத்தால் வேறுபட்டிருந்தாலும்
காலவெள்ளம் கரைசேர்த்தது

-இனி ஒன்றாகிவிடுவோம் என்ற
நம்பிக்கையின் மிச்சத்துடன்--

http://subramanian-thamirabharani.blogspot.com/
20-02-2012   11.45pm