ஞாயிறு, 8 ஜூலை, 2012

புரிந்தபோது...

பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் - என்னை
ஆழமாகக் காதலித்ததாக ஒரு உண்மையைச் சொன்னாள் அவள்.

நான் அன்று போல் இன்றும் வெளிக்காட்டாமல்
மௌனமாகவே......

அவள் கையில் இருந்த குழந்தை என்னிடம் தாவியது.
கேட்டபோது நவின்றாள்.

--- பேரனாம்.........


புதன், 13 ஜூன், 2012

ஆங்காங்கிலம்

அந்த மொழியை இணைப்பு மொழி என்கிறார்கள்
எதை எதை இணைக்க என்றுதான் தெரியவில்லை

அந்த மொழியை இங்கே கொண்டு வந்தவர்கள் -
பிரித்தாளும் பிரித்தானியச் சூழ்ச்சியைத்தானே
விதைத்தார்கள்

கற்றுக்கொண்டவர்கள் தங்களை உயர்நிலை வேந்தனாகக் -
காட்டிக் கொண்டார்கள்
திகைத்து நின்றவனை பாமரன் என்றழைத்து -
பிரித்துப் பார்த்தார்கள்.
எதை எதை இணைத்தார்கள் என்று இன்னும்
தெரியவில்லை

பிரித்துப் பேதம் பார்க்கும் ஒரு மொழியை - இணைப்பு மொழி
என்பதன் நோக்கம் என்னவென்றே இன்னமும் -
புரியவேயில்லை!அ

சனி, 9 ஜூன், 2012

குழப்பம்

பேரமைதி எது என்று தெரியவில்லை - மிக
அதிக ஓசையின் நடுவே இருப்பதா பேரமைதி?

நாக்கைக் கிழிக்கும் சுவை எப்படியிருக்கும்
என்று தெரியவில்லை - சுவையறியா மையப்புள்ளியிலா அது?

மையிருட்டின் ஆழமும் விளங்கவில்லை - பேரொளியின்
உச்ச நிலை தாக்கமா அது?

வெறுப்பின் தீவீரமும், காதலின் முள் வேதனையும் -அன்பின்
மூர்க்கமும் எதிரெதிர் குணங்களாகத்தான் என்றுமே
வெளிப்படுகின்றன!


வெள்ளி, 8 ஜூன், 2012

மனம்

என்னவெல்லாம் சொல்கிறது இந்த மனசு
நினத்தால் பாவம் என்கிறது - நினைக்காவிட்டால்
ஏக்கம் என்கிறது

தானே எடுக்கும் முடிவுகள் என்றுமே பாரம்தான்
என்கிறது.

சரி! சொல்லித்தான் தாயேன் என்றால்-
அது என் வேலை அல்ல என்கிறது!

எனக்குரிய வேலை விமர்சனம் மட்டுமே என்றபடியே -
தூங்கச் சொன்றது அது.

நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டேயிருந்தேன்
என் வேலை அதுவேயென!

புதன், 23 மே, 2012

தவிர்க்க முடியாதது

காரணங்கள் காரணமின்றியே அலைக்கழிக்கும்!
ஈர்ப்பு - இது ஒன்றுதான் பிரதானம்!
விஷயங்கள் தாக்கும்போது எண்ணங்கள் ஓய்வெடுப்பதில்லை!
விளைவுகளைப் பற்றி யோசிக்கவும் நேரமில்லை!

தனக்குள் சுரப்பதை வெளிக்கொணர முயற்சி தேவையேயில்லை!
உந்துதலே பல்லக்குத் தூக்கும்!

தாக்கப்படும்போது தடுப்பது அறிவீனம் - தானே கிடைப்பதை
தள்ளி விடுவதும் பலவீனம்!
தொடங்கியபின் தோரணம் கட்டுவதே சுகம்!


ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

வெளிநாடு

திரைகடலோடி திரவியம் தேடு. நல்ல விஷயம்தான்.அப்படித்தேடாதவர்கள்
தேட இயலாதவர்கள், என்ன பாவம் செய்தார்கள்? சமூகத்தில் அவர்களை கீழான பார்வையோடு அளப்பவர்களை என்ன செய்வது? முக்கியமாக கல்யாணச் சந்தையில். அதிலும் பெண்ணைப் பெற்றவர்கள் தனக்கு வரும் மாப்பிள்ளை கண்டிப்பாக வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதுதான் வேடிக்கை. கை நிறைய சம்பாதிக்கும் உள்ளூர் மாப்பிள்ளை இவர்களைப் பொறுத்தவரை சொத்தைதான். வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்தால் அவர்களுக்கும் வெளிநாடு செல்லும் வாய்ப்புக் கிடைக்குமே! பிறகு கொம்பு முளைத்த தலையோடு சொந்தக்காரர்களிடம் சொல்லிச்சொல்லி கும்மியடிக்கலாமே என்ற தணியாத ஆசைதான்!

உள்ளூர் மாப்பிள்ளையை ஒதுக்குவதன் மூலம் ஒருவேளை வேறுபல இனிமையான, நிம்மதியான வாழ்க்கை சந்தர்ப்பங்களை உங்கள் பெண்ணுக்கு கிடைக்க விடாமல் நீங்கள் தடுக்கிறீர்கள் என்பதுதான் உண்மை!

http://subramanian-thamirabharani.blogspot.com/

சனி, 3 மார்ச், 2012

தொடர்பு

ஒன்றுக்கொன்று தொடர்பான விஷயங்கள்தான் நம்மிடையே
இரத்தத்தில் ஆரம்பித்து இலக்கியம் வரை.

பசியிலிருந்து உணவுவரை
இருளிலிருந்து விடியல்வரை - எனினும்

நிரந்தரமில்லாதவைக்குத்தான் அடித்துக்கொள்கிறோம்
கடைசிவரை.

http://subramanian-thamirabharani.blogspot.com/