சனி, 15 அக்டோபர், 2011

வானுயர 2

பொருளாதார நிபுணர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி,
தற்போது நாட்டின் தலைமைப்  பொறுப்பில் இருப்பவர் என்று அழைக்கப்படும் மன்மோகன் சிங்.

முன்னாள் நிதியமைச்சர், தற்போது பாதுகாப்பு? அமைச்சர், பொருளாதார
நிபுணர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரம்.

தற்போதைய நிதி அமைச்சரும், பொருளாதார நிபுணருமான பிரணாப்
முகர்ஜி.

இந்த மும்மூர்த்திகளின் கண்காணிப்பிலும் நாட்டின் பொருளாதாரம்
ஏனோ தானோ என்றுதான் இருக்கிறது.

விலைவாசி உயர்வு, பங்கு சந்தைகளின் சரிவு, தெலுங்கானா மற்றும்
ஊழல் பிரச்சனைகள் எதுவும் மகிழ்ச்சியைத்தருவதாக இல்லை.

2 ஜி பிரச்சனை பற்றி கேட்டால் பிரதமர் 'எனக்கு சோனியா 'ஜி', ராகுல்'ஜி' -
இந்த '2 ஜி' க்களை மட்டும்தான் தெரியும் என்கிறார்'

மேற்கொண்டு ஏதாவது கேட்டால் 'எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. நான் 
வெளியூரு ' என்று நழுவி விடுகிறார்.

எங்கோ சொந்த ஊரில் மணியடித்து பூஜை நடத்திகொண்டிருந்த பாவம்
பிரணாப் முகர்ஜி எல்லாம் 'பராசக்தியின்' லீலை என்றபடியே உள்ளூரில்
நடக்கின்ற சம்பவத்துக்கு வெளிநாட்டில் போய் மீட்டிங்கில் இருக்கும்
பிரதமரிடம் விளக்கம் சொல்கிறார்.

நம்ம ஊரு சிதம்பரம் 'இனிமேல் சத்தமில்லாத. அதிகம் வீர்யமில்லாத, ஏதோ நகம் மட்டும் பேந்து போறாப்புல பட்டாசை வெடிக்கச்சொல்லி
தீவிரவாதிகளிடம் கேட்டுக்கொள்ளப்போவதாகக்  கேள்வி.

ஒரு படத்தில் கவுண்டமணி கள்ளக்காதலியை பார்க்க அவள் வீட்டுக்கு வருவார்.
திடீரென அவள் கணவன் வந்துவிட கவுண்டமணி பயந்து பரண் மேல் ஏறி 
ஒளிந்து கொள்வார். வந்த கணவனிடம் அவள் 'என்னங்க அரிசி இல்ல, பருப்பு இல்ல என்று ஒவ்வொரு குறையாக சொல்ல 
'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்' என்று கணவன் சொல்ல 
கவுண்டமணி கடுப்படைந்து 'யோவ் எல்லாம் மேல இருக்கறவன் பார்த்துப்பான்,
பார்த்துப்பான்னா நீ எதுக்குயா அவளை கொஞ்சிக்கிட்டுருக்கே'!!!

நம் மும்மூர்த்திகளும் 'எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்'
என்னும் மன நிலையில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது.











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக