வெள்ளி, 14 அக்டோபர், 2011

Rape-O

இப்படித்தான் அழைக்கத் தோன்றுகிறது இதை.

பண வீக்கம் கூடும்போது ரிசர்வ் வங்கி மேலாளர்களில் சிலர் சொட்டைத்
தலை பளீரிட முகமெல்லாம் பல்லாக, வட்டி விகித்தத்தை கால் சதவீதம்
கூட்டிவிட்டு காலாற நடந்து, ஏசி காரில் ஏறி போயே விடுவார்கள்.

Repoரிவர்ஸ் repo என்று கூறப் படும் வங்கிகளின்- பணப் பரிமாற்றங்களின் 
வட்டி விகிதக்கூடுதல், வீட்டுக் கடன், வாகனக் கடன், கோமணக் கடன் என்று
வாங்கிய  சாதாரண மக்களின் தலையில் தான் விழுகிறது.

கேட்டால் மற்ற வங்கிகள் சொல்வது 'ரிசர்வ் வங்கி எங்களை ரேப்பினால்
நாங்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் ரேப்ப முடியும்'. என்று.

சமீபத்தில் ஒரு தனியார் வங்கி வாடிக்கையாளர் முணு முணுத்துக் கொண்டே சொன்னது ' என்ர பணத்த என்ர காலால நடந்து வந்து என்ர
கணக்குல கட்டறதுக்கு சார்ஜ் கொடுக்கணுமாம்'.

மேலாளரிடம் கேட்டபோது ' இதுவும் அந்த 'ரேப்போ' வட்டி விகித கணக்கு
தான் சார். ஒரு மாதத்தில் 5 தடவை மட்டும் தான் சொந்த சேமிப்பு
கணக்கில் பணம் கட்ட அனுமதி. அதற்கு மேல் கட்ட வேண்டும் என்றால்
தனி சார்ஜ் கொடுக்க வேண்டும். ரிசர்வ் வங்கி இப்படி வட்டி விகிதத்தை 
கூட்டி கொண்டே சென்றால் நாங்கள் எங்கு போவது? சமாளிக்க வேண்டாமா ?
கூடிய விரைவில் எல்லா வங்கிகளும் எங்கள் வழியை பின்பற்றும்,
பாருங்கள்' என்றார்.

அதென்னவோ எல்லா வியாழக்கிழமையும் இந்த மாதிரி கால் சதவீதம்
பயமுறுத்தல்   தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.






1 கருத்து:

  1. repo has no link with all these increase in interest rates except short term impairment in sentiments....what sentiments have got to do with interest rates charged.
    this is sort herd mentality used by banks and housing finance cos to make some quick money....absence of strong independent accountability mechanism for regulatory policies in india is responsible for all this....

    பதிலளிநீக்கு