வியாழன், 6 அக்டோபர், 2011

வானுயர

விண்ணைத்தொடும் விலைவாசியைபபற்றி மத்திய அரசுக்கு எந்தக்கவலையும் இல்லை. எண்ணெய் கம்பெனிகளை கொழுக்கவைக்க வேண்டும் என்பது மட்டும் தான் அரசின் திட்டம் போலும்.

நடுத்தர வர்க்கத்தின் முதுகெலும்பை விட்டேனா பார் என்பது போன்ற செயல்கள்தான்  இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. அரசு பணியாளர்களுக்கு கவலை இல்லை. அவர்களுக்கு அரசு, அகவிலைப்படி, பஞ்சப்படி, மஞ்சப்பொடி, என்று  ஏதாவது கொடுத்து அமுக்கி விடுவார்கள்.

அவர்களும் 'விலை ஏறினால் எங்களுக்கு  கவலை இல்லைப்பா. கவர்ன்மென்ட் எங்களுக்கு 'மஞ்சப்பொடி' கொடுக்கும் என்ற ரீதியில் சமாதானமாகி விடுவார்கள். மேல் தட்டு மக்களைப்பற்றி சொல்லவே வேண்டாம். அரசே அவர்கள் கையில்.

அமைச்சர்களுக்கும், எம்பிக்களுக்கும் எம் எல் ஏக்களுக்கும் அனைத்துமே
இலவசமாகக்கிடைத்து விடுகின்றன. எனவே கவலை இல்லை.

போதாக்குறைக்கு அவர்களே மீட்டிங் போட்டு சம்பளத்தை கூட்டிக்கொள்வார்கள்.

மற்ற துறைகளில் உள்ள மக்களின் கதி? அதோ கதிதான்.

ஆண்டவன்தான் காப்பாற்றவேண்டும்.



1 கருத்து: