ஞாயிறு, 16 அக்டோபர், 2011

நப்பாசை

நப்பாசை


அரசியல் சொல்கிறது
தலைவனை, தலைவியை
பின்பற்று என்று 

ஆன்மிகம் சொல்கிறது 
ஆண்டவனை 
பின்பற்று என்று 

மனைவி ஆணையிடுகிறாள் 
என்னை மட்டுமே 
பற்று என்று 

தாய் கண்டிக்கிறாள் 
அவளை 
பற்றாதே என்று 

ஆசைகள் இழுக்கின்றன 
என்னையே பற்றி 
வாழ் என்று 

கம்பெனி சொல்கிறது 
என்னைப்பற்றாவிட்டால் 
உனக்கேது வாழ்வு என்று 

முதியோர் சொன்னது 
'பற்றுக பற்றற்றான் பற்றினை 
அப்பற்றினை பற்று விடற்கு' என்று 

'ஆசை அறுமின்கள் ஆசையறுமின்கள் 
ஈசனோடாயினும் 
ஆசையறுமின்கள்'

என்றோ சித்தர் சொன்னது 
இன்னமும் புத்தியில் 
ஏறவில்லை. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக